மனமும், உடலும்
மகிழ்வோடு இருக்க
முன்னோர்கள்
மோட்சம், சொர்க்கம் என
கடவுளையும், மதங்களையும்
கும்பிடச் சொன்னார்கள்
ஒருவரின் மன நலமும்
உடல் நலமும் பிறரிடமிருந்து
எடுப்பதுமில்லை
கொடுப்பதுமில்லை,
புவி வாழ் உயிர்கள் அனைத்தும்
போராடிப் பெறுபவை
விதைகளுக்குள்ளும்
உயிர் உள்ளது—மண்ணால்
விதையை மூடினாலும்
விதையின் உறை
உயிரை பத்திரமா பாதுகாத்து
புத்துயிர் பெற வைக்கும்
உருமாறும் செடி
புது வாழ்வு தொடங்கும்,
கூண்டிலிருக்கும்
கிளிகளும் போராடித்தான்
வெளி வந்து
விடுதலை பெறவேண்டும்
நீ முக்தி பெறுவதற்கும்
பிறர் உதவ இயலாது—நீயாக
அடிமை ஆகாதவரை
யாரும் உன்னை
அடிமையாக்க முடியாது
உன் சுதந்திரம் உனது கையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக