சனி, 14 செப்டம்பர், 2019

யாரோட பாவமிது ?




படிதாண்டா பத்தினி போல்
பத்திரமா பாதுகாத்து,
அடுத்த வீடு போகாம
அடைத்து வைத்த
ஆற்று நீருக்கு
ஆகாதவளைப்போல்
பருவ பெண்ணாட்டம்
பருவ மழை புகுந்து
படுக்கையில பங்குபோட,
புலம்பி தவித்த பத்தினியோ
பொல்லாத நேரமின்னு
யாரையும் நம்பாம
எங்கும் ஒதுங்காம
ஓங்கிக் குரலெழுப்பி
ஓடிக் கடலில் குதித்து
உயிரை விடுவது

யாரோட பாவமிது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக