சனி, 28 செப்டம்பர், 2019

செதுக்கிய சித்திரம்




அரும்பெரும் காப்பியம்
அகிலம் புகழும் வண்ணம்
தொன்மையும், புதுத்தன்மையும்
கொண்ட அறிய நூல்
இலக்கிய வரலாற்றில்
சிகரம் தொட்ட இசைக்கழல்

தமிழகம் விளைபுலமானதால்
தமிழ் மரபும், மாண்பும்
தழுவிக்கொண்டதுசாதாரண
மக்களின் வாழ்வை
மகுடத்தில் ஏற்றி பெருமை சேர்த்த
மகத்தான காப்பியம்

கானல் வரியில் காதல்
குன்றக் குரவையில் வியப்பு
வேட்டுவ வரியில் வீரம்
வரிப்பாட்டில் மகிழ்வென
அத்தி பூத்தாற் போலொரு
அறியதற்கரிய நூல்

காலில் அணியும்
காற்சிலம்பின் பெயரை
சூடிக்கொண்டாலும்,
முடிமன்னரைப் பாடாது
குடி மக்களின் வாழ்வுதனை
பண்பாடு சிதையாமல்பார்த்து
பார்த்து செதுக்கிய சித்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக