ஆருயிர் தோழிபோல்
அர்த்த ராத்திரியில்
உதவிக்கு வந்தவளாய்
வீடு தேடி வந்து
கதவை தட்டி அழைக்க
இலவசம் நினைவுகளாய்
நெஞ்சமதில் ஆனதால்
கொஞ்சமும் எண்ணாமல்
கூடவே சென்ற மாந்தரை
கொன்று குவித்தாளே!
கண் திறந்த தெய்வம்
கண் சிவந்தாளோ!
நீருக்கு நாளும் போராடும்
மக்களின் குமுறலைக்
குறையெனக் கொண்டாளோ!
உயிர், உடமைகளை
வாரி எடுத்தழித்த மாரியாத்தா
பொங்கி எழுந்து
பூம்புகாரை மீண்டும்
நினைவு படுத்துகிறாளோ!
செய்வதறியாது
திகைத்து நிற்கும் மனிதரிடம்
நிவாரண உதவிக்கு
விசாரிக்க வந்த அதிகாரி
விலாசம் கேட்டார்
“வீடே வெள்ளத்தில்
போன பின்னே—எனக்கு
வெட்டவெளி வாசம்
எனக்கேதய்யா விலாசம்?
என்றார் வேதனையோடு.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக