புதன், 30 டிசம்பர், 2015

பொதுத் தேர்தல்

வளமான வாழ்க்கைக்கு
வரும் போகும் ஆடுகளம்
வழி நெடுக தோரணங்கள்
கொட்டும் மழை பேச்சில்—நீர்க்
குமிழிபோல் வாக்குறுதி

எல்லோரும் மன்னரென
எடுத்து சொன்ன மகராசன்
மகசூல் பார்ப்பதற்கு
மறக்காமல் கைகூப்பி
முகம் காட்டும் பாசக்காரர்

ஆடுகளத் திருநாளில்
அலங்கரித்து வரும்
பரமனுக்கு பூசை செய்ய
பழம், தேங்காய் வாங்கி
பலனடையும் ஊர் மக்கள்

அகிலத்தை வென்றதுபோல்
அரியாசனம் ஏறி
அமர்ந்திட்ட மாமன்னன்—மக்கள்
காட்டிய அன்புக்கும், பரிவுக்கும்
கருணை காட்டுவதுபோல்

கொடிகட்டி விழாயெடுத்து
கொடுத்த படையலில்
சுயநல பருக்கையை எடுத்தபின்
பரிமாறும் இவர்கள்தான்—இனி

புதிய தெய்வங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக