செவ்வாய், 22 டிசம்பர், 2015

என்றும் காக்கும்.

இயற்கையின் எதிர்பார்ப்பு
எவருக்குத் தெரியும்?
வாய்ப்புக்குக் காத்திருந்து
வாய்க்கரிசி போடுவது
வாடிக்கையாகுமென்று

மடியில் பால் சுரக்கும்
விலங்குக்கும்
மனசில் பாசம் சுரப்பதுபோல்
மனித உயிர்களுக்கு
ஆபத்து நேர்ந்தபோது

வானில் வைகறை தீபம்
வந்து ஒளியேற்றி
விடியலைத் தந்ததுபோல்
உதவி அருளிய நல்லுள்ளங்களுக்கு
உளமாற வாழ்த்துக்கள்

உயிரை பணயம் வைத்து
உயிர்களைக் காத்த செயல்
அத்தனையும் பெருமையுறும்,
குழந்தையை தாய் சுமப்பது
கூலிக்கல்ல, பாசம் அது

அன்பு, பாசம், பரிவு, மனிதம்
அனைத்தும் தழைத்தோங்கக்
காத்து அரவணைத்த
கரங்களெல்லாம் தெய்வங்கள்
கைகூப்பி வணங்கப்படும்

மார்பும், முகிலும் சுரந்து
மனித உயிரைக் காப்பதுபோல்
கண்கள் சுரக்கும் கண்ணீர்
அன்பையும், மனிதநேசத்தையும்

என்றும் காக்கும்        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக