உழுதபின் தான் நிலம் விளையும்
உழைக்காமல் வேறுவழி தேடலாமோ!
மண்ணில் மானிடப்பிறவி எடுத்தும்
மனிதாபிமானம் இழக்கலாமோ!
உதவி செய்ய வக்கில்லை—அடுத்தவர்
உயிருக்கு தீங்கிழைக்கலாமோ!
குற்றம் என அறிந்திருந்தும்
குறுக்கு வழி தேடலாமோ!
மனதில் எழும் பேராசையால்
மலைபோல் குற்றங்கள் குவியாதோ!
வறுமையும் வழிகாட்டி வரவேற்றால்
புவியெங்கும் புரையோடி போகாதோ!
ஏழை, பணக்காரரென பிரித்து பார்த்தால்
எல்லோருக்கும் சமநீதி கிடைக்குமோ!
ஒறுத்தல் வேறுபட்டால்—மக்களிடம்
ஒற்றுமை, நேர்மை ஒட்டி உறவாடுமோ!
காணிக்கையும், சடங்குகளும் செய்து
கடவுளை தனதாக்க எண்ணலாமோ!
கும்பிடும் கடவுளை முன்னிறுத்தி—செய்த
குற்றத்தை மறைக்கலாமோ!
மனிதர்களின் நேர்மையற்ற செயலால்
மாயவனும் கலங்கம் வருமென அஞ்சினானோ!
கடவுள் அன்று முதல் இன்று வரை—மக்களுக்குக்
காட்சி தராததும் அது தான் காரணமோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக