வியாழன், 3 டிசம்பர், 2015

மகசூல் கண்டிருக்கும்.



பத்தினி பெண்போல
கரை தாண்டாக் கடல்
கார்மேக உருவெடுத்து
கொட்டிய பெருமழையில்
உடைப்பெடுத்த ஆற்றுநீர்
படி தாண்டி ஊருக்குள்.

குதித்து ஓடிய வெள்ளநீருக்கு
மதிக்கத் தெரியலையே
வீதிக்கு வந்து சாதித்ததென்ன
கழிவு நீரானதுதான் மிச்சம்
கலங்கபட்டு நீ—மக்களையும்
கண் கலங்க வைத்தாயே!

துன்பப் பெருவெள்ளம் சூழ
தத்தளிக்கும் தமிழக மக்கள்
தொலைத் தொடர்பும், மின்சாரமும்
தொடர்பற்று போக
போக்குவரத்தும் பாழ்பட்டு
போக்கத்த நிலையானது.

உயிரும், பயிரும் அழிவதைத்
தடுக்காத இறைவனுக்கு
என்ன குறையோ!
மழையே, நீ பெய்யாம போயிருந்தா
மனித விளைச்சலாவது

மகசூல் கண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக