சொர்க்கமா, நரகமா?
சொல்லத் தெரிவதில்லை
அதனால்தான் இங்கு
அநியாயங்கள் நிகழ்வதில்லை
கையூட்டு பெறாமல்
காரியங்கள் அனைத்தும்
நாட்டில் நாணயமா
நடந்தேறும் ஒரே இடம்
சஞ்சலம் ஏதுமின்றி
சலனமற்ற நிலையில்
ஏற்ற தாழ்வு இன்றி
அமைதி காணுமிடம்
பாவத்தைக் கலைய
பல்லக்கில் பவனி வந்து
இறைவனடி சேர
உருவத்தை தொலைக்குமிடம்
ஒரு மனித உடலின்
வரலாறு முடியுமிடம்
சாம்பலாகி
சமத்துவம் காணுமிடம்
ஆற்றல் அற்ற உடலை
ஆற்றில் விடுவதும் உண்டு
இல்லை
ஆற்றில் கரைப்பதும் உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக