திங்கள், 19 ஜூன், 2017

ஒரு சாட்சி தானே!



துரியோதனின்
குருவான பலராமன்
பாரத யுத்தத்தில்
பங்குபெற மறுத்தது
ஒரு அத்துமீறல்

அர்ச்சுனனின்
குருவான சாத்யகி
கிருஷ்ணனுக்கு எதிராக
போர்புரிய விரும்பாதது
ஒரு அத்துமீறல்

தூது சென்ற
கிருஷ்ண பகவான்
கலகத்தை ஏற்படுத்தி
பகைவர்களை பிரித்தது
ஒரு அத்துமீறல்

அசுவத்தாமனை
எதிரியின் சேனாதிபதியாகாமல்
கிருஷ்ணன் தடுத்து
நிறுத்திய செயல்
ஒரு அத்துமீறல்

பாரத தேசத்தில்
பாரம்பரிய அத்துமீறல்கள்
பாதுகாக்கப்படுவது போல்
இன்றைய அரசியல் நிகழ்வுகளும்

அதற்கு ஒரு சாட்சி தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக