திங்கள், 30 அக்டோபர், 2017

கடவுள் என்பதை இழக்கும்

உருவமற்றவன்
புவிவாழ் உயிர்களுக்கு
உயிரானவன்,
இறைவனைப்போல்
எங்கும் நிறைந்திருப்பவன்,
சினமுற்று எழுந்தால்
சிவன் கூட இவன் காலடியில்

மனிதருக்குள்ளும் புகுந்து
மரணம் தடுப்பவன்
இவனென்றால்
பிரபஞ்சத்தில் மூத்தது யார்?
இயற்கையா? இறைவனா?
இல்லை இவனா?
யாரிடம் கேட்பது?

இறைவன் பல அவதாரங்கள்
எடுப்பதுபோல்—இவனும்
கோடை, வாடை,
கொண்டல், தென்றலென
அவதாரங்கள் பல எடுத்து
இறைவனெனக் காட்டி
ஆணவம் கொள்கிறானோ!

அநுதினமும் வழிபட்ட இறைவன்
ஆபத்துக்கு உதவாதபோது
கலங்கப்பட்டு, கடவுள் இல்லையென
கூறப்படுவதுபோல்
காற்று மாசுபட்டு
உரு பெறும்போது—இதுவும்

கடவுள் என்பதை இழக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக