திங்கள், 5 பிப்ரவரி, 2018

வேறுவழி தெரியல!



ஈராயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்பு 
வாழ்ந்த சீனத்து தத்துவ அறிஞர்
லாவோட்சு சொன்னது

ஆட்சி புரிபவனும்
ஆள்பலம் கொண்டவனும்
உயர் பதவி வகிப்பவனும்
உச்ச செல்வாக்கு பெற்றவனும்

காற்றுள்ளபோதே
தூற்றிக் கொள்வதுபோல்
காலம், காலமாய்
தவறுகள் செய்தார்கள்—இன்றும்
தொடர்கிறது

உன் நாட்டில் மட்டுமல்ல
உலகெங்கும் இப்படி தான்
நாளும் நடப்பதால்
நாம் கவலைபட்டு என்ன பயன்?

மனக்கவலை தீராதபோது
மறக்காமல் வேதனை படு
மனிதனாக பிறப்பெடுத்து
மண்ணில் வாழ்வதற்கு

அறத்தைவிட
சிறந்த ஆக்கம் ஏதுமில்லை
அறத்தைத் துறந்தால்
அழியும் இபூவுலகம்

இறைவன் என்பதும்
இல்லாதவனோ?—மனமும்
ஒரு வெற்றிடந்தானோ?
வேறுவழி தெரியல!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக