வியாழன், 8 பிப்ரவரி, 2018

பழியெனத் தோனலையோ?



நிலத்தில் காணும்
நெற்கதிரைக் கண்டு
நெல் மூட்டையைக்
கணக்கிடுகிறார்
கல்வி கற்காத விவசாயி

கைகளால்
நகையைத் தூக்கி பார்த்து
எத்தனை பவுனென்று
எடுத்து கூறும் பத்தரின்
அனுபவம் சரியாக உள்ளது

வானத்தை பார்த்து
வரையறுக்கும் மீனவர்
வீசும் புயற்காற்றை
முன்னதாக அறிந்து
முடிவெடுக்கிறார் பயணத்தை

அனுபவச் செயல்களின்
அத்தனை கணிப்புகளும்
ஆச்சரியம் தருகின்றன
சரியாக இருப்பதால்—திறமை
சரித்திரம் படைக்கிறது

ஆனால்
படித்த மாந்தரில் பலர்
பணத்துக்கு ஆசைபட்டு—திறமையை
பலி கொடுக்கும்போது
பாழ்படுகிறதே மக்கள் வாழ்வு

பழியெனத் தோனலையோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக