ஈசனின் ஆலயத்தை
எழுப்புவதுபோல
ஈன்றெடுத்த சிசுவின்
வளர்ப்பும்,
கருவறை வாசம்
இருவருக்குமுண்டு—அதனால்
இருவரும் இறைவன் தான்
மானுடத்தை
படைத்தது ஒருவன்—அதில்
பிறந்தது ஒருவன்,
மனிதகுலத் தொடக்கம்
முறையாக அமைந்தால்
மானுடம் சிறக்கும்
மனிதநேயம் தழைக்கும்
நடக்க முயற்சிக்கும் பிள்ளைக்கு
நம் முன்னோர்கள் சொன்னதை
ஆரம்பமாய்க் கற்று கொடு
அன்னையும், பிதாவும்
முன்னறி தெய்வமென்றும்,
அன்பினால் அகிலத்தையே
ஆளலாமென்றும்
பார்த்து வளர்க்காம—அன்பும்,
பாசமும் இழக்கும் பிள்ளை,
வாழையடி வாழையாய்
வாழ எண்ணாம
நாளை பெற்றோரை
நடுத்தெருவில் விடும்போது
நாம குறை கூறலாமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக