ஞாயிறு, 13 மே, 2018

நிறைவு தந்து மகிழவைக்கும்




இறைவன் தந்த உயிர்
அனைத்துக்கும் மேலானது
அதனினும் சிறந்தது
ஒழுக்கம்அது
ஒருவருக்கு உயர்வையும்,
பெருமையும் தரும்

நல்லது, கெட்டது அறிந்து
நன்னெறியில்
நடப்பதைக் குறிப்பது
ஒழுக்கம்இதனை
விதைப்பவர்
புகழை அறுவடை செய்வார்

இழக்கும் செல்வத்தை
மீண்டும் ஈட்டலாம்,
நலம் குன்றினாலும்
நாம் அதனைத் திரும்பப்பெறலாம்,
ஒழுக்கத்தை இழந்தால்புகழும்,
ஆன்மாவின் அழகும் நிலைக்காது

ஒழுக்கம் இல்லாதவனை
உலகம் மதிக்காது
ஒழுக்கம் உள்ளவனை
உலகம் உள்ளளவும் போற்றும்
நல்ல நட்பு தரும்மன
நிறைவு தந்து மகிழவைக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக