சனி, 5 மே, 2018

சுகமாய் வாழத்தானே!




இலவசம் போல் தருகின்ற
இரு நெல்லு மணிக்காக
கறைபட்ட மனிதர் போல
சிறைபட்ட  பச்சைக்கிளியின்
செயலெல்லாம் அடிமைத்தனம்,
எடுத்து கொடுக்கும் சீட்டில்
ஏதோ ஒரு மனிதனின்
ஏற்றத்தாழ்வுகளை
வெளிபடுத்தியதாக எண்ணிகிளி
பெருமை கொண்டாலும்

சிறகுகள் வெட்டப்பட்டு
சிறைபட்டதால்
சுதந்திரம் பறிபோனதும்,
பறக்க முடியாமல்
பாழும் மனம் பரிதவிக்க
இனத்தோடு சேர்ந்து வாழ
இயலாமல் போனதும்
விரும்பியதை உண்ண
வழியில்லாமலானதும்
சிறை படுத்தியவன்
சுகமாய் வாழத்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக