சனி, 12 மே, 2018

முடிவில் வந்து சேருமிடம்




இனிமையாய் வாழ
இயற்கை கொடுத்திருந்தும்
அதீத ஆசையால் சிலர்
அனைத்தையும் தனதாக்கி
சட்டத்தை மதிக்காமல்
சொந்தம் கொண்டாடுவோர்
முடிவில் எதனை எடுத்து செல்லவோ?
மரணமுற்ற போதும்
ஆறு அடி தான் சொந்தம்
அதுவும் நிரந்தரமல்ல

இருக்கும் இடத்தால் தான்
எதுவும் சிறப்புறும்
சட்டியில் இருந்தால் நீர்
சங்கிலே இருந்தால் தீர்த்தம்,
காலில் அணியும்
காலணியின் உரிய இடம்
வாசலுடன் சரி,
வீட்டிற்குள் அனுமதி இல்லை
அங்கிருக்கும் வரை தான்
அதற்கு மதிப்பு

முதலை நீரில் இருக்கும்போது
முந்திக்கொண்டு யானையை
மாய்த்துவிடும்,
கரையிலிருக்கும்போது யானை
காலால் மிதித்து முதலையைக்
கொன்று விடும்,
ஒருவருக்கும் சொந்தமில்லா இடம்
அரசனும், ஆண்டியும்
சரிசமாகும் இடம்
முடிவில் வந்து சேருமிடம்
மனித உடல் மாறுமிடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக