சனி, 1 பிப்ரவரி, 2020

காட்சி தருகிறதோ !




மரம்,செடி,கொடிகளில்
மலரும் பூக்களின் மீது
மையல் கொண்டு
மனத்தை பறிகொடுத்து
காமுகனைப்போல காற்று
கை பிடித்து இழுத்து
கண் கலங்க வைத்து
கை விட்டு போனதால்
இளமையில் கலங்கமென
கீழே விழுந்து
உயிரை விட்டது பூக்கள்

தண்ணீரில் பூத்துத்
தலை காட்டும் பூக்களுக்கு
நீரே துணையாயிருந்து
நன்னடத்தைக்குக் கலங்கமில்லாம
காத்து அருளியதால்
கயவர்கள் யாரும்
அருகில் வர அஞ்சினரோ !
அதனால் தான் எப்போதும்
இளமையோடு இருக்க—மீண்டும்
இதழ்களைக் குவித்து
அரும்பாகக் காட்சி தருகிறதோ !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக