இந்திய மண்ணில்
இடுப்பு வலி இல்லாமலேயே
ஆண் மனிதனுக்கும்
சிசெரியன் ஆப்பரேஷன்
அழிக்கவா ? ஆக்கவா ?
ஆண்டவனுக்கு தெரியாதா ?
ஓருவாய் சோற்றுக்கு
வழியின்றி தவிக்கும் ஏழையின்
வயிற்றை கிழித்து
பிரசவிக்கும் கிட்னியை
விற்று வளம் பெறும்
விலை மா(ந்)தர்கள்
சோற்றுக்கு வழிதேடும்
சோகத்தின் வெளிப்பாடு
கிட்னியும் பட்டினியால்
கைவிட்டு இடம் மாறி
செல்வம் இருப்பவனிடம்
சேர்ந்து வாழும், வெட்கத்தை விட்டு
இடைத்தரகருக்கும்,
இதயமில்லா மருத்துவருக்கும்
இமயம் தொட்ட உணர்வு,
கிட்னி கொடுத்தவன் மட்டும்
மீண்டும் வாழ, எதை
விற்க எண்ணுகிறானோ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக