சனி, 8 பிப்ரவரி, 2020

மகுடம் சூட்டுவது





ஒத்தையடிப் பாதைகள்
ஊர்களை இணைத்து
ஒன்று சேர்த்த காலமது,
பக்கத்து ஊருக்கு பகலில்
பயணம் போனாலும்
பாதுகாப்பில்லாத காலம்

வீட்டில் வசிப்பவரை விட
வெளியிலிருந்து வருபவர்க்கு
உதவிகள் நல்கிடும்
உறங்கவும் இடம் தரும் ,
பிள்ளைகள் ஒன்றுகூடி
படிக்கவும் மடி விரிக்கும்

ஊர் விசேஷத்திற்கு வந்த
வெளியூர்க்காரர்களை
முன்பின் அறிந்திராதபோதும்
மழை, வெய்யிலுக்கு
ஒதுங்க இடம் தந்து
இளைப்பாற வைக்கும்

நம்மை ஒன்றுபடுத்தும்
நல்ல பண்பாட்டின் சின்னம்
முன்னோர்கள் உருவாக்கியது
மனித நேயத்துக்கு
மகுடம் சூட்டுவது
திண்ணை தான் அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக