சனி, 22 பிப்ரவரி, 2020

நீதி மன்றம் கிடையாது.





கணவன் மனைவி போல
கூடி வாழும் ஜோடிப் புறாக்களே
ஓர் எடுத்துக்காட்டு,
இணைந்து கூடு கட்டுவதும்
முட்டைகளை அடைகாப்பதும்
குஞ்சுகளை பாதுகாத்து
உணவூட்டுவதும்

பேடைக்கு நிகராக
ஆண் புறாவும் பங்கேற்பதும்
ஒன்று மற்றொன்றின் வரவை
ஆவலோடு எதிர்பார்த்து
காத்திருப்பதும் ஆச்சரியம்,
மானிட வாழ்க்கையோ
மாறுபடும் காலத்தால்—ஆனால்

காலம் காலமாய் மாறாமல்
கடைசி வரை சேர்ந்து வாழ்வது
வியக்க வைக்கும்
விசித்திரமல்லவா !
நல்ல வேளை , நாகரீக உலகில்
விலங்குக்கும் , பறவைக்கும்
நீதி மன்றம் கிடையாது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக