சனி, 11 ஏப்ரல், 2020

கருணையில்லையா ?



நன்மைகள் குறைவின்றி
நிறைந்திருக்கும் இட த்தை
மங்களகரமான இடமென
மாண்புடையோர் கூறுவர்
மக்களும் ஏற்றனர்

சட்டங்கள் இல்லாதபோதும்
அறச் செயல்கள் மூலம் வாழும்
வாழ்வும் மங்களகரமானது
அதுபோலத்தான்
மங்களம் நிறைந்த பூமியும்

சிறு சிறு இன்னல்கள் வந்தாலும்
சீர்கெடாத புண்ணிய பூமியில்
கொரோனா எனும் கொலைகாரப் பாவி
கொத்து கொத்தாய் மாந்தரை
கொன்று அழிப்பது காலன் அறிவானா?

மங்களச் சொல் மறைந்ததேன்
மண்ணின் அறம் மாண்டு போனதா?
வாழும் மக்களிடம் அன்பு குறைந்ததா?
சுழலும் கோள்களுக்குள் சச்சரவா?—இல்லை
தெய்வங்களுக்குக் கருணையில்லையா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக