ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

காய்ந்து கருகும்





காதலர் தினத்தைக்
கண்டு கொள்ளாதபோது
காதலி உயிரோடு
கூடவே இருந்தாள்

காலம் நகரும் போது
காதலர் தினமும்
வருடா வருடம்
வந்து போகும்

இறைவனுடைய
அநுக்கிரகத்தால்
ஒரு ரோசாப்பூ மட்டும்
இறக்காமல், உயிர் வாழும்

பாழும் மனசு தான்
பயிரைப்போல்
காய்ந்து கருகும்
காதலியை நினைத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக