சனி, 11 ஏப்ரல், 2020

சுய நலம் தானே !




சுய நலம் கூடாதென
முன்னோர்கள் சொன்னது
மற்றவரைக் கெடுத்து நாம் வாழ
எண்ணக்கூடாது
என்பதற்காகவும்,

பணம் சம்பாதிக்க
பணியாற்றும்போது
இது போதாது
இன்னும் வேண்டுமென்ற
பேராசைக் காரணமும் தான்


சுய நலத்தால் உருவானது
புது, புது கண்டுபிடிப்புகள்
செல்போன், ஈமெயில்
டெலிகிராம், மின்சாரம்
எந்திர மனிதன் –மற்றும்

தொழிற்சாலைகள் பெருக
வேலை வாய்ப்புகள் அதிகரிக்க
வாழ்வாதாரத்தை உயர்த்தி
சுகமாக எல்லோரும் வாழ
சுய நலம் தானே காரணம்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக