வெள்ளி, 24 ஏப்ரல், 2020

சிந்திக்கவில்லை




ஊருணியின் ஓரத்திலே
உசந்து நிற்கும் ஆலமரம்,
ஆலமரம் தலைகுளிச்சு
அமைதியாய் நின்னாலும்,
தலையை காயவைக்க
தவமிருக்கும்
கதிரவனின் வரவுக்கு ,
கிளைகளிலுள்ள
இலைகளில் இருக்கும்
மழை நீரோ
மீண்டும் நீராட
துளித்துளியாய்  ஊருணியை
தொட்டு மகிழும்,
தொட்டவுடன் ஆலமரமே
ஆடிப்போகும்,
அசைந்து விட்ட
குளத்து நீரில் .
ஒரு சிறு துளிதான்
ஓசையின்றி  அசைத்தது,
மனிதன் தான் தன்னை இன்னும்
முழுமையாய் உணரவில்லை
சிந்திக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக