ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

இது தான் விதி




அன்று

தனக்கு தனக்கென்றால்
நெஞ்சு படபடக்குமின்னு
தன்னலம் பார்க்காம
தங்கள் உழைப்பையும்,
பொருளையும் அடுத்தவருக்குக்
கொடுத்து உதவினார்கள்

உலக பேரேட்டில் அவர்கள்
வந்ததையும், வாழ்ந்ததையும்
வரலாற்றில் பதிவிட்டார்கள்—அது
உலகம் உள்ளளவும் நிலைத்து
மக்கள் மனதில் இருக்கும்
இது பழங்காலப் பண்பாடு

இன்று

செத்த வீட்டிலும்
சுருட்ட நினைக்கும்
கேடுகெட்ட மனிதர்கள்,
இவர்களை மாற்றியது
வறுமையின் கொடுமையா?—இல்லை
அரசியலின் அனுகூலமா?

தன்னலம் தலை தூக்க
தனக்கென முறைகேடாக
சொத்துகளைக் குவிப்பதும்,
ஈவு இரக்கமில்லாம
அடுத்தவரைக் கெடுத்து வாழ்வதும்
இன்றைய பண்பாடு, இது தான் விதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக