வெள்ளி, 17 ஏப்ரல், 2020

போய் சேர்ந்தாள்





பிறப்பெடுத்த பெண் சிசுவின்
பூ முகம் பார்க்காம
பெத்தவளே தவிக்கவிட்டு
பரிகாரம் தேடி
பாடையில ஏறினாளோ !

பச்சிளம் சிசுவென
பாழும் மனசு நினைக்கலையே
பொண்ணா பொறந்தாலே
பூமியில படும் பாட்டைகாணப்
பொறுக்காம போனாளோ

தூக்கி வளர்த்து ஆளாக்க
தாயாய் வந்த சித்தி
கால ஓட்டத்தில்
கல் நெஞ்சம் கொண்ட
கூனியானாள்பெண்ணோ
பெற்றவளிடமே போய் சேர்ந்தாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக