இறைவன் ஒருவனே ,
இப்புவியில் வாழும்
அனைவரும் உறவுகளே ,
படைத்து காக்கும் பரமன்
படைத்தவையெல்லாம்
பொதுவானது தான்
அனைத்து உயிர்களுக்கும்
வெவ்வேறு இடங்களில்
வாழ்ந்தபோது
அங்கங்கு வசித்த மக்களுக்கு
அன்போடு வழிகாட்டி
அரவணைத்த மகான்களால்
மதங்கள் உருவானது—மாறியது
மக்களின் பழக்க வழக்கங்கள்
அறிவு விரிவானபோது
அங்குள்ளவர்கள் இங்கும்
இங்குள்ளவர்கள் அங்கும்
இடமாறிப் போனாலும்—மனித
உறவுகள் நிலையானது
ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக