ஆதி என்று ஒன்றிருந்தால்
முடிவு என்று ஒன்று உண்டு
மனித வாழ்வில்
மரணமும் அப்படித்தான்,
இறப்பே இல்லாவிடில்
பிறப்பு ஏது ?—வாழ்க்கையின்
மேலான நெறிமுறைக்கு
மரணம் ஒரு காரணம்
வாழ்க்கையின் பெருமை
வாழும் நாட்களில்லை
செய்து முடிக்கும்
செயலில் தான் உள்ளது ,
மரணம் துன்பங்களிலிருந்து
மனிதர்களை விடுவிக்க
அவர்களை தன் மடியில்
ஏந்திக் கொள்கிறது
கூட்டுக்குள் அடைபட்ட
குருவிக்குக் கிடைக்கும்
விடுதலையைப் போன்றது
மரணம், மனிதர்களுக்கு,
வாழ்க்கையில் வாழ்வதற்கு
வழியில்லாதபோது—மரணம்
கை கொடுக்கும்
கவலைகளை போக்கும்
உடலின் புண்ணுக்கு
உதவும் மருந்து ,
உயிரின் புண்ணுக்கு
மரணம் தான் மருந்து ,
மனித வாழ்வில்
மரணம் இல்லையென்றால்
உலகமே நரகமாக
உருமாறி விடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக