அதிகாரத்தை விட
அன்பு தான்
அதிகம் சாதிக்கும் ,
போதை ஒருவனைக்
கொல்லும்
அதிகார போதையோ
அவனையும் கொல்லும்,
அடுத்தவரையும் கொல்லும்
பலவீனம்
சிலரைக் கெடுக்கும் ,
அதிகாரம்
பலரைக் கெடுக்கும் ,
அடுத்தவரை ஜெயிப்பவன்
அறிவாளி –ஆனால்
தன்னைத் தானே ஜெயிப்பவன்
முழு அதிகாரம் உள்ளவன்
ஒரு அரசாங்கத்தில்
அனைத்து அதிகாரங்களும்
மக்களுக்கே சொந்தம் ,
நேர்மை தவறாது
சேவை செய்வதால் கிடைக்கும்
அதிகாரம் தான்
ஒருவனை உயர்த்தும்
ஒற்றுமையை பலபடுத்தும்
அற்பணிப்பு மனதோடு
அடுத்தவருக்கு பணி புரியும்
அதிகாரமே சிறப்புடையது ,
ஆணவம் அழிவைத்தரும் ,
தான் வகிக்கும் பதவிக்கு
தவறான அதிகாரமே
தலை கவிழ வைக்குமென
உணரவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக