வியாழன், 2 ஜூலை, 2020

கருதுவார்கள்




வெற்றி, தோல்வி முக்கியமல்ல
ஒருவனை மதிப்பிட
அவனது குறிக்கோள் தான்
அவனை உயர்த்தும்

வெள்ளாட்டோடு மோதி
வெற்றியடைந்தவனை விட
வேங்கையோடு போராடி
உயிரை இழந்தவன் உயர்ந்தவன்

விழுப்புண் பட்ட வீரன்
வீர மரியாதை பெறுகிறான்
சிலையாக செதுக்கப்படுகிறான்
அவனது குறிக்கோளால்

போரில் மாண்டவனை
போற்றி புகழ்ந்திடுவர்
தோல்வியுற்றாலும் ,வெற்றி
பெற்றதாகக் கருதுவார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக