காலை நேரம்
சாலை ஓரம்—தினம்
கூடையுடன் அமர்ந்து
பூக்கள் விற்கும்
இவளுக்கு
பூவாசம் மட்டும்
என்றும் வாடிக்கை.
இவளோட சோகத்தை
விரித்த பூக்கள்
விவரித்து சொல்லும்,
தொடுத்த
பூக்களெல்லாம்
அடுத்தவரை அழகுபடுத்த
இவளுக்கு மட்டும்
எட்டாத கனியாகும்.
நேர் வகிடெடுத்து
வாரிமுடிந்த
கூந்தலும்
நெற்றி நிறைந்த
குங்குமப் பொட்டுடன்
மங்களகரமாய் காட்சி
தரும்
இவளைக் கண்டு—சூடாத
பூக்கள் மனம் வாடும்.
இலக்கற்று வாழும்
இந்த பூக்காரிக்கு
இறைவனை தரிசிக்க
மனசில்லை—என்றாலும்
வானை பார்த்து
வணங்கிடுவாள்
ஆதவன் வராதிருக்கவேண்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக