தென்னை மரம்
தன்னையே முழுதுமாய்
தந்து காக்கும்
தாவரம்
தனித்து வாழ்ந்தாலும்
கூடி வாழ்ந்தாலும்
வளர்த்தவரை கைவிடாது
தன் பிள்ளைபோல
மனிதர்களை
மடியும்வரை
காத்திருக்கும்
கூரைக்குக் கீற்று
கோடைக்கு இளநீரு
உணவுக்கு தேங்காய்
முடிக்கு எண்ணெய்
கட்டிலுக்கு மெத்தை
கட்டுவதற்குக் கயிறு
இறைவனின்
அர்ச்சனைக்கும்
இசையின் கருவிக்கும்
அனைத்திலும் உன்
வாசம்
கடவுளாய்க்
காத்து வளர்க்கும்
உன்னைப்போல் ஒரு
பிள்ளை
எனக்கு வேண்டுமென
இறைவனை வேண்டி
தேங்காய் உடைக்கிறேன்
நன்றியில்லாமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக