புதன், 3 டிசம்பர், 2014

நன்றியில்லாமல்


தென்னை மரம்

தன்னையே முழுதுமாய்

தந்து காக்கும் தாவரம்

 

தனித்து வாழ்ந்தாலும்

கூடி வாழ்ந்தாலும்

வளர்த்தவரை கைவிடாது

 

தன் பிள்ளைபோல

மனிதர்களை

மடியும்வரை காத்திருக்கும்

 

கூரைக்குக் கீற்று

கோடைக்கு இளநீரு

உணவுக்கு தேங்காய்

 

முடிக்கு எண்ணெய்

கட்டிலுக்கு மெத்தை

கட்டுவதற்குக் கயிறு

 

இறைவனின் அர்ச்சனைக்கும்

இசையின் கருவிக்கும்

அனைத்திலும் உன் வாசம்

 

கடவுளாய்க்

காத்து வளர்க்கும்

உன்னைப்போல் ஒரு பிள்ளை

 

எனக்கு வேண்டுமென

இறைவனை வேண்டி

தேங்காய் உடைக்கிறேன்

நன்றியில்லாமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக