செவ்வாய், 30 டிசம்பர், 2014

திருநங்கையோ!


முக்காடிட்டாலும்

முகம் காட்டி வந்தாலும்

மனம் என்னமோ

மகுடிக்கு மயங்கும்

நாகமாய்

நர்த்தனம் புரியுது

 

கருப்பு மேனியோ

உன் தேகம்!

நீ வானவீதியில்

பவனி வருகையில்

சூரிய பூச்சில்தானே

சொக்க வைக்கிறாய்

 

கள்வனுக்கு

இரு முகங்களுண்டு—நீயும்

இரவில் வருவதால்

உனக்கும் இருமுகமோ!

ஒரு முகம் கண்டேன்

மறுமுகம் காணலையே!

 

உலா வரும்

நிலாப்பெண்ணே

உனக்கெதற்கு

ஆணின் பெயர்?

உண்மையைக் கூறு

நீ என்ன—ஒரு

திருநங்கையோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக