படைத்த உயிரத்தனையும்
பாங்குடனே காப்பதற்கு
பரமனுக்கு முடியாமல்
படைத்திட்டான் அன்னையை
கருவாக்கி உருவாக்கி
மெருகேற்றி வளர்த்தவள்—முடிவில்
மெழுகாய்க் கரைந்தவளும்
அவள்தானே!
கற்றதோ கையளவு
பெற்றவளே உன்னை
கல்லாதது கடலளவு
அல்லவோ!
சிறப்புறும் தாய்மையில்
பறவைக்கோ முதலிடம்
விலங்கினமோ அடுத்தது
முடிவில்தானே மானுடம்
பலநூறுமுறை ஒரு நாளில்
இரைதேடி ஊட்டுமாம்
தன் குஞ்சுக்கு
ரென்னெனும் பறவை
ஈன்ற தாய் யானை
தன் குட்டியல்லாது—காணும்
குட்டிகளனைத்துக்கும்
பாலூட்டி மகிழுமாம்
மனித இனமோ
தான் பெற்ற குழந்தைக்கு
தாய்பால் தராததால்
தாய்மையில் மூன்றாமிடமோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக