ஞாயிறு, 1 ஜூலை, 2018

போதவில்லை




படித்தவனை விட
பட்டதில் அறிந்தவன்
பிழைத்துக் கொள்வான்,
செல்லாக் காசானவனையும்
செல்வந்தனாக்கி
சிறப்படையச்செய்யும் இது

அரிய ஒரு பள்ளிக்கூடம்
அறிந்து தெரிந்து கொண்டால்
கள்வனேயானாலும்
கடைசிவரை கைவிடாது
கருணையுடன் காத்தருளும்,
முதியோரிடம் மிகுந்து காணும்

 வாழ்க்கை பயணத்தை
வழிநடத்தும்  ஊன்றுகோல்,
பலமுறை தோற்றாலும்
பட்ட துயரெல்லாம் பாடமாகும்,
எதையும் மறைத்து சொல்ல
எனக்கு அநுபவம் போதவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக