கிராமத்தின் மத்தியில்
இருக்கும் கிணற்றில்
விழுந்து செத்த எலி
வேதனை தந்தது மக்களுக்கு
கொடிய நாற்றம்
குடிநீரும் பாழ்
எலியை வெளியில் எடுத்தாலும்
என்ன செய்வது குடிநீருக்கு
ஊருசனம் கூடி—நீரை
சுத்தபடுத்த எடுத்த
முடிவுகள் அனைத்தும்
உதவாமல் போனது
கங்கை தீர்த்தம்
கொஞ்சம் தருகிறேன்
கிணற்றில் தெளித்தால்—நீர்
புனிதமாகிவிடும் என
வயதான ஒரு பாட்டி
வாய் மலர்ந்தது
தீர்ந்தது பிரச்சனை
தொடர்கிறது மூட நம்பிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக