வெள்ளி, 6 ஜூலை, 2018

உலகம் செவிசாய்க்கும்




கெடுக்கும் கொடியவர்களை
முட்டாளாக எண்ணலாகாது
அவர்களது அறிவு
குறுக்கு வழியில்
காரியங்களை சாதிக்கிறது
அவ்வளவு தான்

கூனி, வயதானக் கிழவி
கொடியவள்
எடுத்த காரியத்தை
செவ்வனே செய்து முடிக்கும்
சிரத்தையும், திறமையும்
கொண்டவள்

பரதனுக்கு முடிசூட்ட
கூனி எடுத்த சிரத்தை
சக்தி வாய்ந்தவை
அவளின் தந்திர பேச்சில்
இருந்தது நியாயமும்
கடமையுணர்வும்

சொல்ல வேண்டியதை
சுவைபட தந்திரமாக
சொல்லும் திறன் பெற்றவர்
இடும் கட்டளைக்கு
உலகம் செவிசாய்க்கும்
பாவம் ஏழைகள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக