ஞாயிறு, 22 ஜூலை, 2018

தெவசம் கொடுப்பதா!




தெய்வானை அழகானவள்
தெய்வத்துக்கு நிகரானவள்
மணமுடித்து பத்தாண்டு
மனதார வாழ்ந்தாலும்
மழலைப்பேறு இல்லாதது
மனதில் ஒரு பாரம்

குறை இருப்பது
கணவனிடம் தானென
மருத்துவர் சொன்னதும்
மனமுடைந்தாள் தெய்வானை,
குழந்தையொன்றை தத்தெடுக்க
கணவர் சுமனோ மறுத்து விட்டார்

வணிகத்தில் சுமன் தீவிரமானார்
வியாபாரம் மேன்மையுற்றதுஅதில்
பணிபுரியும் செல்வியிடம்
தனது விருப்பத்தை சொல்லி
தனக்கொரு குழந்தை வேண்டி
திருமணம் செய்வதாய் கூறினார்

திருமணம் முடிந்தது
திருமணத்தன்று புது வீட்டில் தங்கி
விடிய காலையில் பழைய
வீட்டுக்கு சென்றார் சுமன்,
எப்போதும்போல்
தெய்வானை பணிவிடை செய்தாள்

நாட்கள் நகர்ந்தன
அங்கும், இங்குமாக சுமன்,
பகல் உணவுக்கு ஒரு நாள்
பழைய வீட்டுக்கு வந்தபோது
செல்வி அங்கிருந்ததைக் கண்டு
ஏன் நீ இங்கு வந்தாயென்றார்?

இங்கேயே வந்து விட
அக்கா தான் சொன்னாங்க
அதான் வந்துட்டேன் என்றாள்அப்ப
தெய்வானை எங்கேயென்று
தவித்தார் சுமன்
தெரு வாசலுக்கு ஓடி தேடினார்

பாவம் தெய்வானை
பரந்தாமனும் உதவாதபோது
போன இடம் தெரியவில்லை,
வருடங்கள் பல ஓடிவிட்டன
தெய்வானையைத் தேடுவதா?—இல்லை
தெவசம் கொடுப்பதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக