வியாழன், 26 ஜூலை, 2018

விடுதலை கிடைக்கும்




அவரவர் நாக்கு
அவரவருக்கு சொந்தம்
அது உதிர்க்கும் வாக்கு
அடுத்தவரை சார்ந்ததால்
அதைக் கையாள்வதில்
அதிகக் கவனம் வேண்டும்

இறைவன் அதனால்
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள் தந்து
நாக்கை மட்டும் ஒன்றாக
நமக்கு படைத்தான்
நல்ல எண்ணத்தோடு

பிறரை வசை பாடி
பாவம் புரியும் நாக்கால்
ஏதுமறியா பல்லும், உடலும்
உடையும், இரத்தம் சிந்தும்,
வம்புக்கு போகாமல் நாக்கை
வாய் தான் தடுக்கணும்--இல்லையேல்

நாக்கு சிவன்போல ஆடி
நாட்டையே ஆட்டி படைக்கும்,
குடும்பம் சிதறும்,
உறவும், நட்பும் பிரியும்
முன்னேற்றமும்  தடைபடுவதால்
நாக்கை கைதியாக்கு
நமக்கு விடுதலை கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக