சனி, 16 மே, 2020

கருணை தானே !





வற்றாத காவிரி
வழி மாறி போனதால்,
வணங்கும் தெய்வம்
வேறு வழி காட்டுவானென
விதைத்த உழவன்

விடியாதா என
வேதனையோடு
வானத்தையே பார்த்திருக்க,
வஞ்சித்த இறைவனை
வசை பாடும் உழவன்

பருவத்து மேகம்
கறுத்து காணும்போது
கால் பதிக்கும் நம்பிக்கை
மனதில் துளிர் விடுவதும்
மண்ணின் கருணை தானே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக