வியாழன், 28 மே, 2020

வலி தந்த வரிகள்


பொற்கொல்லன்

சொன்ன வார்த்தைகளை

ஆராய்ந்து பாராமல்

அப்படியே ஏற்று

கோவலனைக்

கொன்றான்

பாண்டிய மன்னன்,

முடிவில் மன்னனும் இறந்தான்,

மதுரையும் எறிந்தது போல்

 

நேர்மையானவனென்று

பேரெடுத்த இராமன்

வாலியை அழைத்து

விசாரிக்காமல்

அநுமன் கூறியதை

அப்படியே ஏற்று

வாலியைக் கொன்றது

இராமாயணக் காதைக்கு

வலி தந்த வரிகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக