சனி, 2 மே, 2020

உலகுக்கு உணர்த்தும்







மரணப்பட்ட  விதை
மண்ணில் புதையுண்டதால்
வெகுண்டெழுந்து
வெளியே வர,
கத்தியால் குத்தி
கிழிக்கும் மனிதரைப்போல்
நிலத்தைக் கிழித்து
தலையை நீட்டும்
உயிர் இருப்பதை
உலகுக்கு உணர்த்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக