செயல்களை நிறைவேற்ற
கருவிகள் மட்டும் போதாது
மனத்தின்மையும் வேண்டும்,
அறுக்க மாட்டாதவன் கையில்
அரிவாள் இருந்தும் என்ன பயன்?
இராட்டை, அஹிம்சை
இரண்டின் துணை கொண்டு
வெற்றி கண்ட மாமனிதர்
மகாத்மா காந்தி—அவருக்கு
புல்லும் ஆயுதம் தான்
எங்களைக் கேட்டு தான் சூரியனே
எழும்,விழும் என்று சொன்னதும்,
அரை நிர்வாண பக்கிரி என்று காந்தியை
அழைத்ததும் ஆங்கிலேயர்கள் தானே!
காந்தியை வெல்லமுடியாமல்
வெட்கப்பட்டவர்களும் அவர்களே!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
என்னும் பழமொழி மகாத்மாவால்
அகிம்சையெனும் பெருநெறியின்
ஆற்றலால் அதன் இன்னொரு
பரிமானத்தையும்பெற்று நிற்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக