ஆறு குழந்தைகள் பெற்று
அத்தனையும் படிக்க வைத்து
ஆளாக்கி வளர்த்து விட்டவர்
அறுபத்தைந்து வயது முதியவர் ,
அன்பு மனைவியை இழந்தவர்
இன்று அனாதையாய் தெருவில்
தனி மரமா நின்று குடும்பத்தைத்
தாங்கிக் கரை சேர்த்தவர்—இன்று
தான் வாழ வழியின்றி
தனிமையில் சுற்றித் திரியும் நிலை,
தடுமாறும் வயதுடைய முதியவரை
துரத்தி விட்டது துரோகமல்லவா !
பணத்தை முதலீடு செய்வது போல்
பாசமுள்ள அன்பும் முதலீடு தானே !
வங்கியில் போடும் பணம்
வட்டியையும் கூட்டி வரும் ,
பாசத்தின் அன்பு முதலீடு—முதிய
பெற்றோரை வீட்டிலிருந்து விரட்டி விடுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக