வியாழன், 10 செப்டம்பர், 2020

விரட்டி விடுமோ !

 

ஆறு குழந்தைகள் பெற்று

அத்தனையும் படிக்க வைத்து

ஆளாக்கி வளர்த்து விட்டவர்

அறுபத்தைந்து வயது முதியவர் ,

அன்பு மனைவியை இழந்தவர்

இன்று அனாதையாய் தெருவில்

 

தனி மரமா நின்று குடும்பத்தைத்

தாங்கிக் கரை சேர்த்தவர்இன்று

தான் வாழ வழியின்றி

தனிமையில் சுற்றித் திரியும் நிலை,

தடுமாறும் வயதுடைய முதியவரை

துரத்தி விட்டது துரோகமல்லவா !

 

பணத்தை முதலீடு செய்வது போல்

பாசமுள்ள அன்பும் முதலீடு தானே !

வங்கியில் போடும் பணம்

வட்டியையும் கூட்டி வரும் ,

பாசத்தின் அன்பு முதலீடுமுதிய

பெற்றோரை வீட்டிலிருந்து விரட்டி விடுமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக