நல்ல உள்ளங்களுக்கு
நன்மை பயக்கும் விதமாக
நல்ல உறவுகளையும்,
நண்பர்களையும்
இறைவன் படைத்தான்—மன
நிம்மதிக்கு வழி வகுத்தான்
உறவுகளிடமும், நட்புகளிடமும்
உண்மையாக இருங்கள்
மனம் விட்டு பேசுங்கள்,
ஆழ உழுத நிலம்போல
நற்பலனையும், புரிதலையும்
நிறைய பெறுவீர்கள்
சரியான புரிதலோடும்
சந்தேகத்திற்கு இடமின்றி
மனித நேயத்தோடு
மனமாற நேசியுங்கள்—மீதியை
படைத்தவன் ,பண்புள்ளவன்
பார்த்துக் கொள்வான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக