வியாழன், 17 செப்டம்பர், 2020

நிச்சயம் வந்தே தீரும்

 

அன்னதானத்திற்கு

இனையான கொடை

எதுவுமில்லையென்று

வேதங்கள் சொல்லியதை

கொரோனா நிரூபித்தது

 

அன்னமளிப்பது

உயிரைத் தருவதற்கு சமமாகும்,

அன்றைய மக்கள்

அன்னமிட்டவர்களை

இறைவனாக போற்றினார்கள்

 

பொது மக்களுக்கு இன்று

பொதுவாகவுள்ள சோறு, நீரு, காற்றை

பேராசைக்காரர்கள் பதுக்குவதால்

பாவப்பட்ட ஏழை மக்களுக்கு

போய் சேராப் பொருளானது

 

பதவியிலுள்ளோரின் தீராத

பணப் பசியால்,

பாவம் ஏழை மக்கள் வயிற்று பசிக்கு

பரிகாரம் தேடுவதுபோல்

தூக்குக் கயிற்றில் தொங்குகிறார்கள்

 

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்

எத்தனை பெரிய மனிதனானாலும்

வாழ்வில் ஒரு நாள் உணவுக்காக

அடுத்தவரை சார்ந்திருக்கும் நிலை

நிச்சயம் வந்தே தீரும்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக