வியாழன், 10 செப்டம்பர், 2020

,, புகழாரம் சூட்டும்

 


உலக நாடுகள் அனைத்தும்

முன்னேறிய நாடுகளென்றும்

சுதந்திர நாடுகளென்றும்

சொல்லிக் கொண்டாலும்

சுகாதார சீர்கேட்டால் மக்கள்

செத்து மடிவதை நிறுத்த முடிந்ததா ?

 

படித்த அறிஞர்கள், மேதைகள்

பாரினில் பல பேருண்டு

ஒரு நாட்டையே அழிக்க

ஒரு சில வினாடிகள் போதுமென்றவர்கள்

கொரோனாவை அழிக்க எத்தனை

வருடங்களாகுமோ ?—யாரறிவார் ?

 

சான்றோர்கள் நிறைந்திருந்தும்

சாதிக்க முடியாத இந்நிலையில்

புதுமையாக இணைய வழி கற்பித்தல்

புரியுமா மாணவர்களுக்கு ?

படிக்கும் ஏழை மாணவர்களின்

படிப்பு பாதிக்காமலிருந்தால் நல்லது

 

பரீட்சை எழுதி ,வெற்றியடைந்து

பெறுகின்ற சான்றிதழ் தான்

பெருமை தரும்,, புகழாரம் சூட்டும்

எப்போதும் சோறு போடும்,

சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாமல்

சொந்தக் காலில் நிற்க வைக்கும்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக