உலக நாடுகள் அனைத்தும்
முன்னேறிய நாடுகளென்றும்
சுதந்திர நாடுகளென்றும்
சொல்லிக் கொண்டாலும்
சுகாதார சீர்கேட்டால் மக்கள்
செத்து மடிவதை நிறுத்த முடிந்ததா ?
படித்த அறிஞர்கள், மேதைகள்
பாரினில் பல பேருண்டு
ஒரு நாட்டையே அழிக்க
ஒரு சில வினாடிகள் போதுமென்றவர்கள்
கொரோனாவை அழிக்க எத்தனை
வருடங்களாகுமோ ?—யாரறிவார் ?
சான்றோர்கள் நிறைந்திருந்தும்
சாதிக்க முடியாத இந்நிலையில்
புதுமையாக இணைய வழி கற்பித்தல்
புரியுமா மாணவர்களுக்கு ?
படிக்கும் ஏழை மாணவர்களின்
படிப்பு பாதிக்காமலிருந்தால் நல்லது
பரீட்சை எழுதி ,வெற்றியடைந்து
பெறுகின்ற சான்றிதழ் தான்
பெருமை தரும்,, புகழாரம் சூட்டும்
எப்போதும் சோறு போடும்,
சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாமல்
சொந்தக் காலில் நிற்க வைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக