வியாழன், 17 செப்டம்பர், 2020

மாலை சூடவா ?

 

பூமியில பொறந்தவளே

பூச் செடியா வந்தவளே

உசுரோட நீ இருந்தும்

ஒத்தையில நிக்கிறியே !

 

தலையில பூவில்ல

நெற்றியில ஒன்னுமில்ல

ஏண்டி உனக்கிந்த நிலை

என்னடி உன் மனக் கவலை ?

 

மண்ணில் வாழ் மாந்தருக்கு

மங்கள வாழ்வு தரவா ! – இல்லை

மாயவனிடம் மனத்தை பறிகொடுத்து

மாலை சூடவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக