வியாழன், 15 அக்டோபர், 2020

நீ நல்லவனா ? கெட்டவனா ?

 

கொற்றவன் தந்த கொடை போல

கொரோனா தொற்றைக்

கொடுத்து உலகிலுள்ள மக்களைக்

கொன்று குவிக்கும் இறைவா !

கொடுக்காமலேயே நீ

ஒதுங்கி இருந்திருக்கக் கூடாதோ !

 

சாவைத் தடுப்பது போல் இறைவா

சாகசம் நீ புரிந்ததாய்க் காட்டி

சாகடித்த மக்கள் ஏராளம்,

சாகாத மக்களுக்கு பணி ஓய்வு தந்து

சம்பளமும் கொடுத்து ,சாகாமலேயே

சொர்க்கத்தைக் காண வைத்ததும்  உனது

சாதனை தானே !

 

தொப்புள் கொடி உறவு போல

தொற்றிய கொரோனா சுடுகாடு வரை

தொடர்ந்து வந்து உயிரை பறித்ததும் ,

தனி மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள

தனித்து இருத்தலும், முக் கவசம் அணிவதும்

தொடர் கதையாக்கி

 

மீதமுள்ள வாழும் மக்களை காத்து

மகிழ வைத்த மாயவனே !

மீண்டு வந்த மக்களின் பணிகளை

முடக்கி, வாழ்வாதாரத்தை பறித்ததால்

மரணத்தைத் தழுவும் நிலையிலுள்ள

மக்களுக்கு நரகத்தையும் காட்டிய

மாயவனே, நீ நல்லவனா ? கெட்டவனா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக